புதுடெல்லி:
அஞ்சல் துறை தமிழ்நாடு வட்டத்தில் 2994 கிராம அஞ்சல் ஊழியர்கள் (ஜிடிஎஸ்) காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்களில், சென்னை நகர மண்டத்தின் கீழ், 607 பணியிடங்களில் பணிபுரிய தகுதியான விண்ணப்பத்தாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிவிக்கப்பட்ட பதவிகளின் வகைகள் பின்வருமாறு:
கிளை அஞ்சல் அதிகாரி பணிக்கு ரூ. 12,000 முதல் ரூ. 29,380 வரை வருமானம். துணை கிளை அஞ்சல் அதிகாரி மற்றும் கிராம அஞ்சல் ஊழியர் பணிக்கு ரூ. 10,000 முதல்- 24,470 வரை சம்பளம்.
விண்ணப்பங்களை ஆன்லைனில் https://indiapostgdsonline.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் சமர்ப்பிக்கலாம். இணைய தளத்தில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 23.08.2023.
கல்வித்தகுதி, மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு மற்றும் இதர தகுதி நிபந்தனைகள் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு https://indiapostgdsonline.gov.in என்ற இணைய தளத்தைப் பார்வையிடவும்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






