இயற்கை முறையில் காய்கறி விளைவிக்கும் சிறை வாசிகள்….

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகேயுள்ள புரசடை உடைப்பு திறந்தவெளி சிறையில் இயற்கை முறையில் காய்கறிகளை கைதிகள் விளைவிக்கின்றனர்.

புரசை உடைப்பு திறந்தவெளிச் சிறை 2013-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இங்கு பல்வேறு சிறைகளில் இருந்து நன்னடத்தைக் கைதிகள் கொண்டு வரப்படுகின்றனர். தற்போது 51 கைதி கள் உள்ளனர். 85 ஏக்கரில் அமைந்த இந்தச் சிறையில் 35 ஏக்கரில் விவசாயம் செய்யப்படுகிறது. இப்பணியை கைதிகளே மேற்கொள்கின்றனர்.

ஆரம்பத்தில் கரடு, முரடாக இருந்த இந்தச் சிறை வளாகம் தற்போது பசுமையாக காணப்படுகிறது. இங்கு கத்தரி, வெண்டை, புடலை, அவரை, பீர்க்கை, உளுந்து, வாழை, மரவள்ளிக் கிழங்கு, கரும்பு, சோளம், நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப் படுகின்றன. மேலும், தென்னை, கொய்யா, நெல்லி, முந்திரி, பலா, எலுமிச்சை, ரோஸ்உட், சந்தனம், தேக்கு, மகாகனி உள்ளிட்ட மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இது தவிர ஆடு, நாட்டு மாடுகளும் வளர்க்கப்படுகின்றன.

அவற்றின் கழிவுகளைப் பயிர்களுக்கு இயற்கை உரங்களாகப் பயன்படுத்து கின்றனர். இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள், பழங்கள் மதுரை மத்தியச் சிறையில் உள்ள அங்காடிகளில் விற்பனை செய்யப் படுகிது. அவர்கள் கடந்த 3 மாதங்களில் 2 டன் வரை காய்கறிகளை விளை வித்தனர். மேலும் விவசாயப் பரப்பை அதிகரிக்கும் வகையில் கிணறு அமைக்க சிறைத் துறை டிஜிபி அம்ரேஷ் பூஜாரி முயற்சி எடுத்துள்ளார்.

இது குறித்து சிறைத்துறை டிஐஜி பழனி கூறுகையில் ‘இங்கு இயற்கை முறையில் விவசாயம் செய்யப்படுகிறது. விவசாயப் பணிகளில் ஈடுபடும் கைதிகளுக்கும் மன அழுத் தம் குறைகிறது. இயற்கையோடு வாழ்வதால் மனமாற்றம் அடைகின்றனர். திறந்தவெளி சிறை மீது டி.ஜி.பி கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். விவசாயப் பரப்பை அதிகரிக்க உள்ளோம்’ என்றார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

இயற்கை முறையில் காய்கறி விளைவிக்கும் சிறை வாசிகள்….

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.