இரண்டு நாள் பயணமாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று சென்னை வருகை

சென்னை: திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் 70வது பிறந்த நாள் விழா நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் இன்று மாலை நடக்கிறது. விழாவில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்குகிறார். அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பின்பு முதன்முறையாக தமிழ்நாட்டுக்கு வர உள்ளதால் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது.
இன்று பிற்பகல் 2.05 மணிக்கு பெங்களூருவில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வரும் அவருக்கு சென்னை விமான நிலையத்தில் காங்கிரசார் திரண்டு வந்து வரவேற்பு அளிக்க தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது: அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக மல்லிகார்ஜுன கார்கே 2 நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார். நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கும் அவர் காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா கூட்டத்தில் கலந்துகொள்கிறார். அன்று இரவு சென்னையில் தங்குகிறார். 2ம் நாள் காலை 9.30 மணிக்கு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ் காந்தி நினைவிடம் சென்று மரியாதை செலுத்துகிறார்.

அங்கு நெடுஞ்சாலை பணிகளுக்காக அகற்றப்பட்ட இந்திரா காந்தி சிலை புதுப்பிக்கப்பட்டு மாற்று இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதை திறந்து வைக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

தாம்பரம் தலைமை அரசு மருத்துவமனையில் மருந்து&மாத்திரை வழங்குவதில் காலதாதம்; கூடுதல் கவுன்டர்கள் திறக்கப்படுமா?

சென்னை: DAYA(A)) டாக்டர் அம்பேத்கர் இளைஞர் அரசியல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை

கபடி வீராங்கணை கண்ணகிநகர் கர்த்திகாவிற்கு இந்திய அணியில் இடம் மறுத்தது ஏன?: தயா அமைப்பு கேள்வி

சென்னை:DAYA(A) டாக்டர் அம்பேத்கர் இளைஞர் அரசியல் அமைப்பு நிறுவன தலைவர் இரா.மு.அருண்குமார் வெளியிட்டுள்ள

ஊழல் பெருச்சாளிகளின் கூடாரமாக மாறுகிறதா தவெக?: சா.ரஜினிகாந்த்

சென்னை:விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் சா.ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-ஜென்சி

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட்டால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும்: – தங்கம் தென்னரசு

சென்னை:பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் கைவிடப்படும் என்று முதல்வர்

அக்.2 முதல் மாநகர, நகரங்களில் அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்: முதல்வர்

சென்னை:தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110–&ன கீழ் தமிழ்நாடு முதலமைச்சர்ச. ஜோசப்

இரண்டு நாள் பயணமாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று சென்னை வருகை

தாம்பரம் தலைமை அரசு மருத்துவமனையில் மருந்து&மாத்திரை வழங்குவதில் காலதாதம்; கூடுதல் கவுன்டர்கள் திறக்கப்படுமா?

சென்னை: DAYA(A)) டாக்டர் அம்பேத்கர் இளைஞர் அரசியல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை

கபடி வீராங்கணை கண்ணகிநகர் கர்த்திகாவிற்கு இந்திய அணியில் இடம் மறுத்தது ஏன?: தயா அமைப்பு கேள்வி

சென்னை:DAYA(A) டாக்டர் அம்பேத்கர் இளைஞர் அரசியல் அமைப்பு நிறுவன தலைவர் இரா.மு.அருண்குமார் வெளியிட்டுள்ள

ஊழல் பெருச்சாளிகளின் கூடாரமாக மாறுகிறதா தவெக?: சா.ரஜினிகாந்த்

சென்னை:விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் சா.ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-ஜென்சி

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட்டால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும்: – தங்கம் தென்னரசு

சென்னை:பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் கைவிடப்படும் என்று முதல்வர்

அக்.2 முதல் மாநகர, நகரங்களில் அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்: முதல்வர்

சென்னை:தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110–&ன கீழ் தமிழ்நாடு முதலமைச்சர்ச. ஜோசப்