ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. முதல் சுற்றில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார். தற்போது 7-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றுள்ளது. உணவு இடைவேளைக்காக வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.
7-வது சுற்று முடிவில் காங்கிரஸ் 53,548 பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக 19,936, நாம் தமிழ்ர் கட்சி 2964 வாக்குகள், தேமுதிக 431 வாக்குகள், பிற 261 வாக்குகள். சதவீதத்தின்படி காங்கிரஸ் 68.18 சதவீதம், அதிமுக 22.97 சதவீதம், தேமுதிகம 0.92 சதவீதம், பிற 7.68 சதவீதம், நோட்டா 0.28 சதவீதம் பதிவாகியுள்ளது. உணவு இடைவேளைக்கு பிறகு மீண்டும் வாக்கு எண்ணப்படும்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






