ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: டெபாசிட்டை தக்க வைத்தது அதிமுக; 75 வேட்பாளர்கள் டெபாசிட் காலி

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் டெபாசிட்டை அதிமுக தக்க வைத்தது. 10 வது சுற்றின் முடிவில் 28,637 வாக்குகள் பெற்றிருப்பதன் மூலம் டெபாசிட்டை அதிமுக தக்க வைத்தது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. ஆரம்பம் முதலே திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார். அதிமுக வேட்பாளர் தென்னரசு கடும் சறுக்கலை எதிர்கொண்டு வருகிறார். இதனால் அதிமுக டெபாசிட்டை இழக்கும் சூழல் நிலவியது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் டெபாசிட்டை அதிமுக தக்க வைத்துள்ளது. டெபாசிட்டை தக்க வைக்க, மொத்தம் பதிவான 1,70,000 வாக்குகளில் 6ல் ஒரு பங்கு, அதாவது 28,333 வாக்குகள் பெற வேண்டும்.
10 வது சுற்றின் முடிவில் 28,637 வாக்குகளை பெற்றிருப்பதன் மூலம் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக டெபாசிட்டை தக்க வைத்துள்ளது. 10ம் சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் 76,301 வாக்குகளை பெற்றுள்ளார். 10ம் சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் 48,062 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மொத்தமுள்ள 77 வேட்பாளர்களில் காங்கிரஸ் மற்றும் அதிமுக மட்டுமே டெபாசிட்டை தக்க வைத்துள்ளது. மீதமுள்ள 75 வேட்பாளர்கள் டெபாசிட்டை இழந்தனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: டெபாசிட்டை தக்க வைத்தது அதிமுக; 75 வேட்பாளர்கள் டெபாசிட் காலி

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி