உலக குத்து சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 3 வெண்கல பதக்கங்களை உறுதி செய்த இந்திய வீரர்கள்

உஸ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ்கன்ட் நகரில் உலக குத்து சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், ஆடவர் குத்து சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீரர்களான தீபக் போரியா (51 கிலோ), ஹுசாமுதீன் (57 கிலோ) மற்றும் நிஷாந்த் தேவ் (71 கிலோ) ஆகியோர் இன்று வரலாறு படைத்தனர்.

உலக குத்து சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் முதன்முறையாக இந்திய குத்து சண்டை வீரர்கள் 3 பதக்கங்களை உறுதி செய்து உள்ளனர். இதற்கு முன்பு, கடந்த 2019-ம் ஆண்டில் மணீஷ் கவுசிக் மற்றும் அமித் பங்கால் ஆகிய இருவரும் இந்தியாவுக்காக பதக்கங்களை வென்றதே சாதனையாக இருந்து வந்தது.

இதில், இன்று நடந்த போட்டி ஒன்றில், கிரிகிஸ்தானின் தியூஷிபேவ் நூர்ஜிகித் என்பவரை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி தீபக் அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார்.

இந்தியாவின் ஹுசாமுதீன், பல்கேரியாவின் டையஸ் இபானேஜ் என்பவரை 4-3 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார். இதனால், இந்தியாவுக்கு மற்றொரு பதக்கம் உறுதியானது. இந்திய வீரர் நிஷாந்த் தேவ், கியூபாவின் ஜார்ஜ் கியூவெல்லாரை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு முன்னேறி நாட்டுக்கான மற்றொரு பதக்கத்திற்கு வழிவகுத்து உள்ளார். அவர்கள் அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில், இன்று ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 வெண்கல பதக்கங்கள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

உலக குத்து சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 3 வெண்கல பதக்கங்களை உறுதி செய்த இந்திய வீரர்கள்

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச