எர்ணாவூர் பகுதியில் கஞ்சா விற்பனை : சொகுசு காரில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது

சென்னை எர்ணாவூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக எண்ணூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எர்ணாவூர் அருகில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை போலீசார் கையசைத்து நிறுத்தியபோது கார் நிற்காமல் வேகமாக சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த காரை விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்து தீவிர சோதனை செய்தனர். அதில் காரில் கஞ்சாவை பதுக்கி கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து காரில் வந்த திருவொற்றியூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த விக்னேஷ் (வயது 25), எண்ணூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த தருண் கிருஷ்ணா (23), ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த செல்வராஜ் (34) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள், ஆந்திராவில் இருந்து சொகுசு காரில் கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது. அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

எர்ணாவூர் பகுதியில் கஞ்சா விற்பனை : சொகுசு காரில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்