ரயில் விபத்து – 6 ரயில்கள் ரத்து. ஹவுராவில் இருந்து இயக்கப்படும் சென்னை மெயில் உட்பட 6 ரயில்கள் ரத்து. ரயில் விபத்து எதிரொலியாக மேலும் 5 ரயில்கள் மாற்று பாதையில் இயக்கம். கோரமண்டல் ரயில் மட்டும் அல்ல, ஒரு சரக்கு ரயில், துரந்தோ ரயில் என மொத்தம் 3 ரயில்கள் விபத்தில் சிக்கியுள்ளது.
ரயில் பெட்டிகள் ஒன்றன்மீது ஒன்று விழுந்து உருகுலைந்து கிடப்பதால் மீட்பு பணிகளை கவனமுடம் கையாளுவதாக தலைமை செயலர் அறிவித்துள்ளார். மீட்பு பணிகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டலினுடன் ஆலோசனை நடத்தினார் ஒடிசாவின் தலைமை செயலர். மேலும், ராணுவத்தில் இருந்து மருத்துவர் குழு மற்றும் பொறியாளர் குழுவும் விபத்தில் உள்ளானவர்களை மீட்பதற்காக ஒடிசா வந்துள்ளனர்.
இந்த அகோர விபத்தில் ஒடிசாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய 55 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெற்கு ரயில்வே துறை அறிவித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டை சேர்ந்த 32 பேர் உயிர் இழந்திருக்கக்கூடும் என வருவாய் துறை செயலாளர் தகவல் அளித்துள்ளார்.
ரயிலில் பயணித்த 127 பேரில் 65 பேர் பாதுகாப்பாக இருப்பதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒடிசாவில் இருந்து தமிழ்நாட்டை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட பயணிகள் சிறப்பு இரயில் மூலம் தமிழ்நாட்டு திரும்பிகிறார்கள் என தகவல் தெரிவித்துள்ளனர்.


கோரமண்டல் ரயில் விபத்து : மீட்புப் பணிகளுக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் அளிக்குமாறு காங்கிரஸ் தொண்டர்களையும் தலைவர்களையும் கேட்டுக்கொள்கிறேன்: ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியினருக்கு அறிவுறுத்தினார்.
கோரமண்டல் ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தாருக்கு ரூபாய் 10 லட்சம், காயமடைந்தவர்களுக்கு 50000 ரூபாய் மத்திய இரயில்வே துறை அறிவித்துள்ளது.
மிகப்பெரிய விபத்தாக இருக்கும் என ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஐந்துக்கும் மேற்பட்ட பெட்டிகளின் இருப்பவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஏழு பெட்டிகள் முற்றிலும் சேதம், நான்கு பெட்டிகள் முற்றிலுமாக ரயில் பாதை இருக்கும் பகுதியில் இருந்து வெகு தூரம் சென்று தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மூன்று பெட்டிகளில் சிக்கியிருக்கும் ஒருவரை கூட இதுவரை மீட்கவில்லை என தகவல் தெரிவிக்கப்படுகிறது.







