தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கோயில் வளாகத்தில் பழ வியாபாரம் செய்து வரும் பாஸ்கர் என்பவர் 36 வயதாகியும் கல்யாணமாகாத ஏக்கத்தில் கல்யாண புரோக்கர் ஒருவரை நாடி உள்ளார் அவரும் 50;000 ரூபாய் பெற்றுக் கொண்டு பாஸ்கருக்கு மணப் பெண்ணை பார்த்து திருமணம் நடத்தியுள்ளார் மணப்பெண் திருமணமான இரண்டே நாட்களில் கணவர் பாஸ்கரனை ஏமாற்றிவிட்டு நகை மற்றும் பணத்துடன் தலைமறைவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






