தமிழ் மாநில காங்கிரஸ் 10ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு சென்னை கோட்டூர்புரத்தில் கட்சி கொடியினை தென் சென்னை வடக்கு மாவட்ட தலைவர் சைதை மனோகரன் ஏற்றி வைத்தார். தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்பு, அறுசுவை உணவுகள் மாநில பொது செயலாளர் ராஜம் எம்.பி. நாதன் வழங்கினார். விழாவில் மாநில நிர்வாகிகள் சைதை நாகராஜன், தி.நகர் கோதண்டம், ஈகை சுந்தரவரதன், கே.டி.எஸ்.ராஜா, கிண்டி மம்மு, பகுதி தலைவர்கள் கோட்டூர் மதனகோபால், ஈகை பாலசந்தர். பி.எல்.மகிழ்நன், ஆலந்தூர் குருமூர்த்தி, சின்னமலை சுப்பிரமணி, மடுவை சுந்தர்ராஜன், ஐய்யம்பெருமாள், ஷாஜகான், ஜெயராமன், குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






