கொல்கத்தா ஓட்டலில் பயங்கர தீ விபத்து: 9 பேர் பலி; பலர் காயம்

கொல்கத்தா:
மேற்கு வங்க மாநில தலைநகரான கொல்கத்தாவில் ஓட்டல் ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு உயர் அதிகாரிகள் பலர் வந்து நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
இந்த பயங்கர தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறையினர் கூறியதாவது:
மத்திய கொல்கத்தாவின் மிர்சா காலிப் பகுதி மக்கள் நெருக்கடி மிகுந்தது. இங்கு மிகவும் பழைய கட்டிடத்தில் ஓட்டல் ஒன்று இயங்கிவந்தது. அந்த ஓட்டலில் வங்கதேசம், மேகாலயா, அதில்புர்தூர் பகுதிகளைச் சேர்ந்த பலரும் மருத்துவ சிகிச்சைக்காக வந்து தங்கியிருந்துள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து தகவலறிந்ததும் எங்கள் துறை (தீயணைப்பு) துரிதமாக செயல்பட்டது.


இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். நெருக்கடியான கட்டிடம், விபத்து ஏற்பட்டால் வெளியேறுவதில் இருக்கும் சிக்கலால் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்க அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர். காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் நகரின் பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் என்னவென்று உறுதியாகத் தெரியவில்லை. இவ்வாறு தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
தீ விபத்துக்கான காரணத்தை அறியும் வகையில் விரைவில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்டமாக ஓட்டல் உரிமையாளர்களை போலீஸ் கைது செய்துள்ளது.

முதலமைச்சர் மருத்துவக் காப்பீடு தொகை ரூ.25 லட்சமாக உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு

சென்னை:“முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் இலவச மருத்துவ சிகிச்சைக்கான மருத்துவ காப்பீட்டுத்

வேளாங்கண்ணி மாதா ஆலய ஆண்டு திருவிழா: சைதை பாதயாத்திரை குழுவினர் சமபந்தி விருந்து

சைதாப்பேட்டை:நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியில் உலகப் புகழ் பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம்

தவெக ஆட்சியில் 6 காவல் மரணங்கள்; இனியும் நடக்காமல் அரகூ தடுக்க வேண்டும்; அன்புமணி

சென்னை:பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை சிந்தாமணி காவல் நிலையத்துக்கு

டெண்டருக்கு முன்பே முதலமைச்சருக்கான புதிய அறை பணிகள் தொடங்கியது எப்படி?: – டி.டி.வி. தினகரன் கேள்வி

சென்னை:தலைமைச் செயலகத்தில் முதலமைச்சருக்கான புதிய அறையை தயார் செய்வதற்கான டெண்டர் அறிவிக்கும் முன்னரே

கொல்கத்தா ஓட்டலில் பயங்கர தீ விபத்து: 9 பேர் பலி; பலர் காயம்

முதலமைச்சர் மருத்துவக் காப்பீடு தொகை ரூ.25 லட்சமாக உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு

சென்னை:“முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் இலவச மருத்துவ சிகிச்சைக்கான மருத்துவ காப்பீட்டுத்

வேளாங்கண்ணி மாதா ஆலய ஆண்டு திருவிழா: சைதை பாதயாத்திரை குழுவினர் சமபந்தி விருந்து

சைதாப்பேட்டை:நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியில் உலகப் புகழ் பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம்

தவெக ஆட்சியில் 6 காவல் மரணங்கள்; இனியும் நடக்காமல் அரகூ தடுக்க வேண்டும்; அன்புமணி

சென்னை:பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை சிந்தாமணி காவல் நிலையத்துக்கு

டெண்டருக்கு முன்பே முதலமைச்சருக்கான புதிய அறை பணிகள் தொடங்கியது எப்படி?: – டி.டி.வி. தினகரன் கேள்வி

சென்னை:தலைமைச் செயலகத்தில் முதலமைச்சருக்கான புதிய அறையை தயார் செய்வதற்கான டெண்டர் அறிவிக்கும் முன்னரே