செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டம் தையூர் கிராமம். இவ்கிராமம் நூற்று ஐம்பது ஆண்டுகள் அதாவது 1870 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் பதினைந்து குடும்பங்கள் மட்டுமே கும்மி இருட்டில் மின் கம்பம் மின் விளக்குகளின்றி ஒற்றையடிப் பாதையில் வாழ்ந்து வருகின்றனர்.
இப்பாதையின் இருபுறமும் தாழம்பூ புதர்கள் சூழ்ந்த பாம்புகள் நிறைந்த காணப்படும். இக்கிராமத்தில் இம்மக்களை ஹரிஜன மக்கள் வாழும் பகுதி ஹரிஜன காலணி என்று அழைப்பர். இப்பகுதியில் மிகவும் தைரியமாக வாழ்ந்தவர்கள் செட்டியூல்டு இன மக்களாவார்கள். மிகவும் பழமை வாய்ந்த இக்கிராமத்தில் தற்போது சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கோமான் நகர் சுமைதாங்கி ரோடு ஐந்துக்கும் மேற்பட்ட ஊர்களுக்குச் செல்லும் பிரதானம் ரோடாக விளங்குகிறது . இக்கோமான் நகர் சுமைதாங்கி ரோடு பெயர்ப் பலகையில் மீண்டும் தற்போது ஹரிஜன காலணி என்று பெயர் பதியப்பட்டு இருபத்தைக்கண்டு அவ்வூர் மக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவத்தை கேள்விப்பட்ட 2023 மே 31 அன்று அபயம் என வழங்கும் பாபாசாகெப் அம்பேத்கர் இளைஞர் இயக்க பாசறையின் மாநில இளைஞர் அணி செயலாளர் I A எழிலரசு மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் சம்மந்தப்பட்ட மாவட்ட அரசு அதிகாரிகள், ஒன்றிய அலுவலக அதிகாரிகள், பேரூராட்சி அதிகாரிகள் ஆகியோர்களின் கவனத்திற்கு தெரியப்படுத்தினர்.
இனி இப்பகுதி கோமான் நகர் என்று பதிவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்கள் என்பதை நமது தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் செங்கல்பட்டு மாவட்ட நிருபர் அவர்களிடமும் தெரியப்படுத்தியுள்ளனர்.
செய்திகளுக்காக,
இரா. மு. அருண்குமார்
தலைமை மாவட்ட நிருபர், செங்கல்பட்டு.







