சிங்கப்பூரை கலக்கமடைய செய்யும் கொரோனா! – கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டார் பிரதமர் லீ…!

சிங்கப்பூரில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந் நிலையில், பிரதமர் லீ சியன் லூங், கொவிட்-19க்கு எதிரான மேம்படுத்தப்பட்ட தடுப்பூசியை சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் போட்டுக்கொண்டார். மக்களும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். கடந்த சில நாட்களாக சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது. இந்நிலையில், அண்மையில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட மேம்படுத்தப்பட்ட புதிய தடுப்பூசியை சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் போட்டுக்கொண்டுள்ளாா். இதுதொடர்பாக அவர் தனது பேஸ்புக் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள குறிப்பில், இந்த புதிய மேம்படுத்தப்பட்ட தடுப்பூசி , ஓமிக்ரான் XBB 1.5 கிருமியின் திரிபு அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது எனறார்.

தான் தடுப்பூசி போட்டுக்கொண்டதைப் போல், முன்னதாக கோவிட்-19 வைரஸ் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட சிலர், இந்த மேம்படுத்தப்பட்ட புதிய தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்றார். அடுதடுத்த நோய் தொற்றுகளில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றால் இந்த மேம்படுத்தப்பட்ட தடுப்பூசியை போட்டுக்கொள்வது கட்டாயம் என கூறினார்,

மேலும், இந்த புதிய தடுப்பூசியை 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள், மருத்துவரீதியாக எளிதில் பாதிக்கப்படும் சூழ்நிலையில் உள்ளவர்கள், ஆகியோர் தடுப்பூசியை தவறாமல் போட்டுக்கொள்ள பிரதமர் லீ சியன் லூங் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சிங்கப்பூரை கலக்கமடைய செய்யும் கொரோனா! – கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டார் பிரதமர் லீ…!

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச