சென்னை:
பெருநகர சென்னை மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளை மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா 11ம் தேதி அதிகாலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சியில், நகர்ப்புர உட்கட்டமைப்பு நிதி , சேமிப்பு நிதி மற்றும் சிங்கார சென்னை 2.0 ஆகிய திட்டங்களின் கீழ் ரூ.172.70 கோடி செலவில் 226 கிலோமீட்டர் நீளத்தில் பேருந்து சாலைகள் மற்றும் உட்புறச்சாலைகள் அமைக்கும் பணிகள் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறின்றி இரவில் நடைபெற்று வருகின்றன.
மேயர் ஆர். பிரியா அறிவுரையின்படி இப்பணிகளை கண்காணிக்க முதன்மைச் செயலாளர்/ ஆணையாளர் தலைமையில், அலுவலர்கள், பொறியாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு அக்குழுவினர் கண்காணிப்பில் இந்த சாலைப் பணிகள் அனைத்தும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மேயர் ஆர்.பிரியா 11ம் தேதி (இன்று) அதிகாலை 1.30 மணி அளவில் தேனாம்பேட்டை மண்டலம், வார்டு – 110க்குட்பட்ட வள்ளுவர் கோட்டம் பிரதான சாலையில் புதிதாக சாலை அமைக்க பழைய சாலையினை அகழ்ந்தெடுக்கும் பணிகளையும், அண்ணா நகர் மண்டலம் வார்டு 101க்குட்பட்ட அண்ணா நகர் முதல் பிரதான சாலையில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் புதிதாக சாலை அமைக்கும் பணியினையும் திடீர் ஆய்வு மேற்கொண்டு பார்வையிட்டார்.
புதிதாக அமைக்கப்படும் சாலைகளைத் தரமாகவும், விரைவாகவும் முடித்திட அலுவலர்களுக்கு மேயர் உத்தரவிட்டார்,
இந்த ஆய்வுகளின்போது, நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) நே.சிற்றரசு, மாமன்ற உறுப்பினர் மெட்டில்டா கோவிந்தராஜ், தலைமைப் பொறியாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர். அதிகாலை 1.30 மணியளவில் மேயர் பிரியா திடீர் ஆய்வு மேற்கொண்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பொதுமக்கள் மேயருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு