சென்னை மாநகராட்சி 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து இட்லி வடிவமைப்பின் மூலம் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு…

வருகின்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, தேர்தலில்
வாக்காளர்கள் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து இட்லி வடிவமைப்பின்
மூலம் வாக்காளர்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தும் தேர்தல்
விழிப்புணர்வு இட்லி கண்காட்சி நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல்
அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர்
ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள்
இன்று (15.04.2024) மெரீனா கடற்கரையில் தொடங்கி வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 3 பாராளுமன்றத்
தொகுதிகளிலும், வருகின்ற 19.04.2024 வெள்ளிக்கிழமையன்று
நடைபெறவுள்ள தேர்தலில் வாக்காளர்கள் 100% வாக்களிப்பதன் அவசியம்
குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வகையிலான
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக,
இன்று மெரீனா கடற்கரையில், வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும்
வகையில் சிறுதானியத்தினைப் பயன்படுத்தி, மின்னணு வாக்குப்பதிவு
இயந்திரம், தேர்தலுக்கான முத்திரை, 100% வாக்குப்பதிவு,
ஓட்டுப்பதிவிற்கான மை வைக்கப்பட்ட விரல் வடிவம் உள்ளிட்ட பல்வேறு
வடிவங்களில் சிறுதானிய இட்லி தயாரிக்கப்பட்டு காட்சிப்படுத்தி விழிப்புணர்வு
ஏற்படுத்தப்பட்டது. மேலும் இக் கண்காட்சியினைப் பார்வையிட்ட மக்களுக்கு
சுவையான சிறுதானிய இட்லி, குல்பி சாக்லேட் இட்லி வழங்கப்பட்டது.
“சிறுதானிய இட்லி சாப்பிட்டா உடம்புக்கு நல்லது; தவறாமல் ஓட்டு போட்டா
ஜனநாயகத்துக்கு நல்லது” என்கிற இந்த தேர்தல் விழிப்புணர்வு இட்லி
கண்காட்சியினை மக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு புகைப்படம் எடுத்து
மகிழ்ந்தனர்.
இந்நிகழ்ச்சியில் தேர்தல் நடத்தும் அலுவலர்/மத்திய வட்டார துணை
ஆணையாளர் திரு.கே.ஜெ.பிரவீன் குமார், இ.ஆ.ப., கூடுதல் மாவட்ட தேர்தல்
அலுவலர் மற்றும் துணை ஆணையர் (கல்வி) திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப.,
இட்லி இனியவன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

வெப்ப அலைகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான மேம்பட்ட நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்: தேசிய மனித உரிமைகள் ஆணையம்

நாட்டில் வெப்ப அலைகளால் பாதிக்கப்படக்கூடிய மக்களை பாதுகாப்பதற்கு தேவையான மேம்பட்ட நடவடிக்கைகள் மற்றும்

தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்

*🔹🔸தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்**📍. அரசியல் நோக்கங்களுக்காக

சென்னை மாநகராட்சி 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து இட்லி வடிவமைப்பின் மூலம் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு…

வெப்ப அலைகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான மேம்பட்ட நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்: தேசிய மனித உரிமைகள் ஆணையம்

நாட்டில் வெப்ப அலைகளால் பாதிக்கப்படக்கூடிய மக்களை பாதுகாப்பதற்கு தேவையான மேம்பட்ட நடவடிக்கைகள் மற்றும்

தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்

*🔹🔸தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்**📍. அரசியல் நோக்கங்களுக்காக