அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய 444-ம் ஆண்டு பெருவிழா சிவகங்கை அருகே 40 வயது நபருக்கு நேர்ந்த கொடூரம் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் டிவியில் முதல் மெய்நிகர் செய்தி வாசிப்பாளர் ‘லிசா’ அறிமுகம்…

புவனேஸ்வர்: ஒடிசா தனியார் தொலைக்காட்சி, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் உருவாக்கிய பெண் செய்தி வாசிப்பாளரை அறிமுகம் செய்துள்ளது. அதற்கு ‘லிசா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

கம்ப்யூட்டர், இன்டர்நெட் தாண்டி தற்போது உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. இந்த தொழில்நுட்பத்தில் கேட்கும் அனைத்து வகையான கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் சாட்ஜிபிடி அறிமுகமானது. அமெரிக்காவில் நீதிமன்றங்களில் வழக்குகளில் வாதாட ஏஐ ரோபோ வழக்கறிஞர்கள் கூட அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. அத்துடன் அனைத்துத் துறைகளிலும் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிக்கல்களை தீர்க்க ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் தனியார் தொலைக்காட்சி ‘ஓடிவி’, நாட்டிலேயே முதல் முறையாக மெய்நிகர் பெண் செய்தி வாசிப்பாளரை அறி முகம் செய்துள்ளது. இதற்கான விழா தலைநகர் புவனேஸ்வரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மெய்நிகர் பெண் செய்தி வாசிப்பாளர் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். அவருக்கு ‘லிசா’ என்று பெயரிட்டுள்ளனர். ‘ஓடிவி’ பிராந்திய அளவில் இலவச சேனலாக செயல்பட்டு வருகிறது. ‘லிசா’வை அறிமுகப்படுத்தி ஓடிவி நிர்வாக இயக்குநர் ஜகி மன்கட் பாண்டா கூறியதாவது:

தொலைக்காட்சியில் லிசாதான் முதல் பெண் மெய்நிகர் செய்திவாசிப்பாளர். ஒரு காலத்தில் கம்ப்யூட்டர் என்பதே ஆச்சரியப்படும் விஷயமாக இருந்தது. அதன்பிறகு காலம் மாறி தற்போது இன்டர்நெட் ஆதிக்கம் செலுத்துகிறது. இன்டர்நெட்டில் மக்கள் அதிக நேரம் செலவிடுகின்றனர். இதுபோன்ற மாற்றங்களை கருத்தில் கொண்டு ‘ஓடிவி’ சேனல் முதல் முறையாக பெண் மெய்நிகர் செய்தி வாசிப்பாளர் லிசாவை அறிமுகம் செய்துள்ளோம். நாங்கள் ஒடிசாவில் கடந்த 1997-ம் ஆண்டு தொலைக்காட்சி சேனல் தொடங்கும்போது அதன் இலக்கில் தெளிவாக இருந்தோம். அதன்பிறகு 26 ஆண்டுகளாக முதல் இடத்தில் இருக்கிறோம். இப்போது இன்னொரு மைல்கல்லை எட்டியிருக்கிறோம். லிசாவை அறிமுகம் செய்ததன் மூலம், தொலைக்காட்சி ஒளிபரப்பில் மேலும் பல மைல்கற்களை எட்ட முடியும்.

தற்போது எங்கள் தொலைக்காட்சி பார்வையாளர்கள் மாறி உள்ளனர். அதிகபட்சமான செய்திகளை வழங்குவதில் அவர்களுக்கு ஆர்வம் இல்லை. சில செய்திகளில் வேறு பரிமாணத்தை அல்லது கேள்விகளுக்கான பதில்களை அவர்கள் எதிர்பார்க்கின்றனர். அந்த கோணத்தில் அவர்களது விருப்பத்தை நிறைவு செய்யும் வகையில் தற்போது ஓடிவி தொலைக்காட்சியில் லிசா அறிமுகமாகி இருக்கிறார். இதற்கு செயற்கை நுண்ணறிவு பல வழிகளில் எங்களுக்கு உதவியாக இருக்கிறது. இவ்வாறு ஜகி மன்கட் பாண்டா கூறினார்.

ஒடியா, ஆங்கிலத்தில் பேசும்: ஓடிவி.யின் டிஜிட்டல் வர்த்தக தலைவர் லிடிஷா மன்கட் பாண்டா கூறும்போது, ‘‘லிசா அறிமுகம் எங்களுக்கு புதுவித அனுபவம். கூகுள் கூட ஒடியா மொழியை ஆங்கிலத்தில் சரியாக மொழிபெயர்த்து வழங்குவதில்லை. எங்கள் குழு தீவிர முயற்சி செய்து லிசாவை கொண்டு வந்துள்ளோம். உங்களைப் போல ஒடியா மொழியை லிசா சரளமாக பேச முடியாவிட்டாலும், கூகுளைவிட சிறப்பாக பேசும்’’ என்றார். ஓடிவி.யில் அறிமுகமாகி இருக்கும் லிசா, பல மொழிகளையும் பேசும்திறன் படைத்தது. எனினும் முதல் கட்டமாக ஒடியா மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் பேசும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் டிவியில் முதல் மெய்நிகர் செய்தி வாசிப்பாளர் ‘லிசா’ அறிமுகம்…

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை