மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் , இன்று (26.06.2023) சென்னை, சைதாப்பேட்டை, அன்னை வேளாங்கண்ணி மகளிர் கல்லூரியில், உலக வெண்புள்ளிகள் தினம்-2023 முன்னிட்டு, இந்திய வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம் சார்பில், சேர்ந்து வரைவோம் மற்றும் விழிப்புணர்வு உறுதியேற்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, வெண்புள்ளிகள் விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்றார். இந்நிகழ்வில் ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பரஞ்சோதி, பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலக்குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் .கே.உமாபதி, முனைவர்.டி.இதிருவேங்கடம், அன்னை வேளாங்கன்னி கல்வி குழுமத்தின் நிறுவனத் தலைவர் முனைவர்.எஸ்.தேவராஜ், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்








