பெருநகர சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-142, சைதாப்பேட்டை, மேற்கு ஜோன்ஸ் சாலை சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாமன்ற உறுப்பினர் வார்டு மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நவீன கணினி ஆய்வகத்தினை (HI-TECH COMPUTER LAB) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (22.06.2023) திறந்து வைத்து, ஆய்வகச் செயல்பாட்டினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மண்டலக்குழுத் தலைவர் எம்.கிருஷ்ணமூர்த்தி மாமன்ற உறுப்பினர் திரு.எம்.ஸ்ரீதரன் அவர்கள், மண்டல அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.







