ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நேற்றைய தினம் பல முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. பல பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விகிதத்தைக் குறைத்து அறிவிப்பு வெளியானது. அதேநேரம் சில பொருட்களின் விலை உயர்ந்தும் உள்ளன. குறிப்பாக ஆடம்பர மற்றும் sin goods எனப்படும் தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்குக் கூடுதல் வரியாக 40% விதிக்கப்பட்டுள்ளது. இதில் மனித உடலுக்குக் கேடு விளைவிக்கும் சிகரெட், புகையிலை, குட்கா, பாக்கு, கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்கள் மற்றும் ஆன்லைன் சூதாட்டம் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. அதேபோன்று 350 சிசி-க்கு மேல் திறன் கொண்ட பைக்குகள், பெரிய சொகுசு கார்கள், தனிநபர் ஹெலிகாப்டர்கள் மற்றும் சொகுசுப் படகுகள் (Yachts) போன்ற அத்தியாவசியமற்ற ஆடம்பரப் பொருட்களும் இந்த 40% உயர் வரி வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. எளிய மக்களின் பயன்பாட்டுப் பொருட்களுக்கு வரிக்குறைப்பு வழங்கி நிவாரணம் அளிக்கும் வேளையில், இத்தகைய தீங்கு விளைவிக்கும் மற்றும் உயர் ரகப் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதன் மூலம் பெறப்படும் நிதியைப் பொது சுகாதார நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் தற்போது மின் கட்டண உயர்வு குறித்த விவாதங்கள் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகின்றன. எவ்வித முன் அறிவிப்பும் இன்றி உயர்த்தப்பட்டிருக்கும் கட்டணத் தொகையைப் பார்த்து சராசரி நுகர்வோர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். வீடுகளில் பெரிய அளவில் மின் பயன்பாடு அதிகரிக்காத நிலையிலும், ஏன்… சில இடங்களில் பூட்டிய வீடுகளுக்குக் கூட மின் கட்டணம் பன்மடங்கு உயர்ந்து வந்துள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த கவலையையும், எதிர்பாராத குடும்ப நிதி நெருக்கடியையும் உருவாக்கியுள்ளது.
சாதாரணமாக இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.700 முதல் ரூ.900 வரை கட்டணம் செலுத்தி





