ட்விட்டரின் லோகோவை நாய் படமாக மாற்றிய எலான் மஸ்க்

ட்விட்டர் நிறுவனத்தின் லோகோ, நாய் படமாக மாற்றப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, டோஜ்காயின் கிரிப்டோகரன்சியின் மதிப்பு 30 சதவீதம் அதிகரித்துள்ளது.

டெஸ்லா நிறுவன உரிமையாளரான எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதைத் தொடர்ந்து, பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். இதனிடையே, டோஜ்காயின் கிரிப்டோகரன்சி குறித்து கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அடிக்கடி ட்விட்டரில் பதிவிட்டு வந்தார்.
இதனைத் தொடர்ந்து, கிரிப்டோகரன்சியின் மதிப்பு பெருமளவில் உயர்ந்தது. இதன் காரணமாக, 21 லட்சம் கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு அமெரிக்க நீதிமன்றத்தில் எலான் மஸ்குக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் எலான் மஸ்க் தரப்பு வழக்கு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், டோஜ்காயினுக்கு பயன்படுத்தப்படும் நாய் படத்தை, தனது டிவிட்டர் நிறுவனத்தின் லோகோவாக எலான் மஸ்க் மாற்றியுள்ளார். இதன்படி, ஏற்கனவே இருந்த நீல வண்ண குருவிக்குப் பதிலாக ட்விட்டரில் நாய் படம் இடம்பெற்றுள்ளது. ட்விட்டரின் லோகோ மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, டோஜ்காயின் கிரிப்டோகரன்சியின் மதிப்பு 30 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.

வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த கியூஆர் குறியீடு அடிப்படையிலான அடையாள அட்டை முறையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது

வாக்கு எண்ணும் மையங்களில் அங்கீகாரமில்லாத நபர்கள் யாரேனும் வருவதற்கான சாத்தியக்கூறினை நீக்குவதற்காக இசிஐநெட்

தவெக தலைவர் விஜய் திருச்செந்தூருக்கு சென்று முருகப்பெருமானை தரிசித்து சாமி கும்பிட்டார்

இன்று சமூக வலைதளங்களிலும், செய்தி சேனல்களிலும் அதிகமாக பேசப்பட்ட மூன்று முக்கிய செய்திகள்

நமது நாட்டில் தமிழ் படித்த புலவர்கள் எல்லாம் சாமியார்களாகத்தான் போவது வழக்கமாக இருக்கின்றது

“நமது நாட்டில் தமிழ் படித்த புலவர்கள் எல்லாம் சாமியார்களாகத்தான் போவது வழக்கமாக இருக்கின்றது.

ட்விட்டரின் லோகோவை நாய் படமாக மாற்றிய எலான் மஸ்க்

வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த கியூஆர் குறியீடு அடிப்படையிலான அடையாள அட்டை முறையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது

வாக்கு எண்ணும் மையங்களில் அங்கீகாரமில்லாத நபர்கள் யாரேனும் வருவதற்கான சாத்தியக்கூறினை நீக்குவதற்காக இசிஐநெட்

தவெக தலைவர் விஜய் திருச்செந்தூருக்கு சென்று முருகப்பெருமானை தரிசித்து சாமி கும்பிட்டார்

இன்று சமூக வலைதளங்களிலும், செய்தி சேனல்களிலும் அதிகமாக பேசப்பட்ட மூன்று முக்கிய செய்திகள்

நமது நாட்டில் தமிழ் படித்த புலவர்கள் எல்லாம் சாமியார்களாகத்தான் போவது வழக்கமாக இருக்கின்றது

“நமது நாட்டில் தமிழ் படித்த புலவர்கள் எல்லாம் சாமியார்களாகத்தான் போவது வழக்கமாக இருக்கின்றது.