நடவடிக்கை எவ்வாறு எடுக்கப்படும் : அதற்கான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமைச்சட்டம் – 2005 ன் படி தகவல் கோறும் விண்ணப்பதாரரின் விண்ணபத்திற்கான தகவலை விண்ணப்பம் கிடைத்த 30 நாட்களுக்குள் தகவலை தகவல் அளிக்க வேண்டும். அவசர தகவல் என்றால் 48 மணி நேரத்துக்குள் தகவல் அளிக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் கோரிக்கையை ஏற்க மறுக்கும்போது தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005, பிரிவுகள் 8 மற்றும் 9 இல் குறிப்பிட்ட ஏதேனும் ஒரு பொருத்தமான காரணத்தைச் சுட்டிக்காட்டி நிராகரிக்க வேண்டும். விண்ணப்பத்தை மறுப்பதற்கான காரணத்துடன், அக்கோரிக்கை நிரகரிக்கப்பட்டதை எதிர்த்து விண்ணப்பதாரர் மேல் முறையீடு எந்த காலக் கெடுவிற்குள் செய்யப்பட வேண்டும் என்பதையும் தெரிவிக்கவேண்டும்.
கோரப்பட்ட தகவல் ஒருவருடைய உயிர் அல்லது சுதந்திரம் தொடர்புடையதாக இருப்பின், அதற்கான கோரிக்கை பெறப்பட்ட 48 மணிநேரத்திற்குள் தகவல்களாக அளிக்கப்படுதல் வேண்டும். மனுதாரர் வறுமைக்கோட்டிற்கு, கீழுள்ள நபராக இருந்தால் எவ்வித கட்டணங்களையும் அவரிடமிருந்து வசூலிக்கக்கூடாது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் – 2005 பற்றிய மேல பல தகவல்களை அடுத்த பதிவில் பார்ப்போம்.







