தமிழக வெற்றி கழகம் சார்பில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, திருவள்ளூர் தென்மேற்கு மாவட்ட மகளிர் அணி இணை அமைப்பாளர்
வி.எம்.சுஜாமணி முருகன் அவர்கள் வில்லிவாக்கம் தெற்கு ஒன்றியம் வெள்ளானூர் ஊராட்சியில் முதலாம் ஆண்டு ஒருநாள் கால்பந்து வெட்ரன் போட்டியை
தொடங்கி வைத்தார் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக திருவள்ளூர் தென்மேற்கு மாவட்ட கழக செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் எம்.எல். விஜய்பிரபு அவர்கள் கலந்து கொண்டு, போட்டியில் வெற்றி பெற்ற இரு அணிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
இதில் வில்லிவாக்கம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெய்சங்கர் அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களை வாழ்த்திப் பேசினார். தொடர்ந்து மகளிர் அணி இணை அமைப்பாளர் வி.எம். சுஜாமணி முருகன் சிறப்பு விருந்தினர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.
இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் லோகேஷ், ஜெகன், விஜயகுமார், ரஞ்சித், விஜய், பொன்னிவளவன், ரகு ஆகியோருடன் மகளிர் அணி நிர்வாகிகள் திவ்யா, ரேவதி, ஷோபனா, சரிதா, ரெஜினா, சிவகாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
இந்த போட்டிக்கான அனைத்தும்
வி.எம்.சுஜாமணி முருகன் அவர்கள் மேற்கொண்டிருந்தார். விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும்
“போதைக்கு இல்லை விளையாட்டுக்கு
ஆம்”
வகையில் நடைபெற்ற இந்த கால்பந்து போட்டி பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகளின் வரவேற்பைப் பெற்றது. இந்த நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 94:துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் இன்புறூஉம் இன்சொ லவர்க்கு. விளக்கம்:எல்லாரிடத்திலும் முகம்






