தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் 32 மணி நேர உண்ணாவிரதம்

சென்னை:
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 32 மணி நேர உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி சென்னை சைதாப்பேட்டை கலைஞர் பொன்விழா வளைவு அருகே இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. நாளை மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த உண்ணாவிரதத்திற்கு மாநில தலைவர் ஏ.சந்திரசேகர் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர்கள் பி.அபராஜிதன், ஆ.மிக்கேலம்மாள், வி.குப்புசாமி, எஸ்.கனகவேல், மாநில செயலாளர்கள் சி.பிச்சுமணி, ஆ.கிருபாவதி, க.ரவி, த.ஜெயந்தி, கு.குணா, ப.சங்கரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். டிஎன்ஜிஇஏ மாநில தலைவர் எஸ்.தமிழ்ச்செல்வி உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அ.நூர்ஜஹான் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
இதில், மாநிலம் முழுவதும் சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள ஆயிரக்கணக்கான காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். முதலமைச்சரின் காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமாக அமல்படுத்த வேண்டும்.
அரசு அனைத்துத்துறை காலிப் பணியிடங்களில் சத்துணவு ஊழியர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் காலமுறை ஊதியத்தில் பதவி உயர்வு வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூ.6850ஐ அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும்.
கருணை அடிப்படையிலான பணி நியமனம் ஆண் வாரிசுகளுக்கும் வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் சத்துணவு ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு 12 மாதம் வழங்க வேண்டும்.
அரசு ஊழியர்களுக்கு மாதத்திற்கு ஒருமுறை வழங்கக்கூடிய தற்செயல் விடுப்பை வருடம் முழுவதும் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்குவதுபோல், சத்துணவு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும். தலைவர்கள் பிறந்தநாளன்று வழங்கக்கூடிய இனிப்பு பொங்கல் செலவு தொகையினை உயர்த்தி வழங்க வேண்டும்.
சத்துணவு சமைப்பதற்கு தேவையான எரிவாயு உருளை செலவுத் தொகையை அரசே முழுமையாக வழங்க வேண்டும். வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று வழங்கக்கூடிய உருளைக்கிழங்கு செலவுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். என்கிற 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
இதில் டிஎன்ஜிஇஏ முன்னாள் பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்பிரமணியன், முன்னாள் மாநில தலைவர் மு.சுப்பிரமணியன், முன்னாள் மாநில துணைத் தலைவர் ச.இ.கண்ணன், டிஎன்ஆர்டிஓஏ மாநில துணைத் தலைவர் மு.செல்வக்குமார், டின்என்எம்ஏபிஏ மாநில பொதுச் செயலாளர் இ.மாயமலை, டிஎன்ஐசிடிஎஸ்ஓயுஎஸ் பொதுச் செயலாளர் இரா.வாசுகி, டிஎன்எச்ஆர்இ(யு)ஏ மாநில பொருளாளர் வி.பி.பரமேஸ்வரன் உள்பட பலர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்றுள்ளனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் 32 மணி நேர உண்ணாவிரதம்

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.