குறள் 19
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்காது எனின்.
குறள் விளக்கம்: மழை பெய்யாவிட்டால் பரந்த உலகில் தானம் தவம் ஆகிய இரண்டும் நடைபெறாமல் நின்றுவிடும். இதைப்போன்று பரிசுத்த ஆவியின் பொழிவு இல்லாவிட்டால் தானம் தவம் இரண்டையும் செய்வதற்குரிய தூண்டுதல் இல்லாமல் போய்விடும்.
திருமறை விளக்கம்: அப்படியே திருமறையும் யாக்கோபு 1:17
2:2 ந்து வீடு ளில் வும் ம்
“நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி எனவும் சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கி வருகிறது. அப்போஸ்தலர் 1:4″ யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானம் கொடுத்தான் நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்” என்றும் திருக்குறளும் திருமறையும் ஒரே கருத்தையே வலியுறுத்தி அறம் செய்யத் தூண்டும் பரிசுத்த ஆவியை விளக்குகின்றன.






