பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து இயற்கை வளத்தை பாதுகாக்க வேண்டும்.பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்த விபரங்களை பொது மக்களிடம் அதிகளவில் எடுத்துரைத்து முற்றிலுமாக பிளாஸ்டிக் பயன்பாடுகளை தடைசெய்ய நிர்வாகிகள் முக்கிய பங்காற்ற வேண்டும்.பிளாஸ்டிக் இல்லா திருப்பூரை உருவாக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஈ.பி.அ.சரவணன் வலியுறுத்தல்.தமிழ் திருநாளான பொங்கள் பண்டிகையெட்டி சாதி, மதம், இனம், மொழி கடந்து சங்கம் சார்பாக சமத்துவ பொங்கள் நிகழ்ச்சி நடத்தப்படும்.திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் தெற்குபாளையத்தில் துணை செயலாளர் கணபதி தலைமையில் நடைபெற்றது.சங்கத்தின் நிறுவனத்தலைவர் சமூக ஆர்வலராகிய ஈ.பி.அ.சரவணன் முன்னிலை வகித்தார்.இந்த கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன
- உலகுக்கு உணவு அளித்திடும் உழவன் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு தான் பொங்கல் விழா ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் வித்தியாசங்களைக் கடந்து தமிழராக ஒன்றிணைந்து தமிழ் திருநாளான பொங்கள் பண்டிகையெட்டி வருகின்ற 09-01-2025 ம் தேதி நமது சங்க தலைமை அலுவலகத்தில் சமத்துவ பொங்கள் வைத்து விழா நடத்தப்படும்.
- பொங்கள் பண்டிகையெட்டி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள், தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல்,
- சங்க வளர்ச்சிக்காக நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து சிறப்பாக செயல்பட வேண்டும்.
- தடைசெய்யப்பட்ட பாலித்தீன் பை, பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட தட்டு, டம்ளர் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதால் சுற்றுபுறசூழலுக்கு ஏற்படும் தீங்குகள் குறித்தும் பொது மக்களிடம் எடுத்துரைத்து விழிப்புணர்வுகளை அதிகளவில் ஏற்படுத்த வேண்டும்.
- நாம் அனைவரும் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப்பைகளை உபயோகப்படுத்த வேண்டும். முழுமையாக பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து நிலம், நீர் மற்றும் காற்று என இயற்கை வளத்தை பாதுகாக்க வேண்டும்.
- பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்த விபரங்களை பொது மக்களிடம் அதிகளவில் தெரிவிக்க வேண்டும்.உள்ளிட்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் துணைத் தலைவர் சின்னத்துரை , கமலகண்ணன், செயலாளர் வெள்ளையப்பன் ,இணை செயலாளர் நாகராஜன், பொருளாளர் ராஜசெல்வம், துணை செயலாளர், ரமேஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் ஜோதிமணி, சுரேஷ் , செயற்குழு உறுப்பினர்கள் காந்திமதி , சித்திரைசெல்வி, சரவணக்குமார், பாலகுமார், ஜானகிராமன், பாத்திமா, ஜான் மொண்டோன்ஷா உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.






