இன்று பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாக கூட்டரங்கில், வருகின்ற பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள குடும்பத்தினரிடையே தேர்தலில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற தேர்தல் குறித்த வினாடி வினா போட்டி நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து, தேர்தல் குறித்த கேள்விகளுக்கு சரியாகப் பதிலளித்தவர்களுக்கு பரிசினை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்) சுரேஷ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



