
புதுடெல்லி:
எதிர்க்கட்சியினரின் தொடர் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பொதுத்தேர்வு முறைகேடு தடுப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, முறைகேடு உள்ளிட்டவையால் மாணவர்கள் தற்கொலைக்கு பஞ்சமில்லாமல் உள்ளது.
தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் டெல்லி ஜந்தர்மந்தரில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிற்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தான் காரணம் என மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். இதனால் கூச்சல் குழப்பம் எழுந்தது.
இதற்கிடையே மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். அதில் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைத் தடுக்க கடுமையான சிறைத்தண்டனை மற்றும் அபராதங்களை இந்த மசோதா வழங்குகிறது. பொதுத் தேர்வு முறைகேடுகளில் ஈடுபடும் தனிநபர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் வரை அபராதமும், வினாத்தாள் கசிவு மற்றும் கூட்டுச் சதியில் ஈடுபடுவோருக்கு ரூ.10 கோடி வரை அபராதமும் விதிக்க இந்த மசோதா வழிசெய்கிறது என்றார்.






