நேபாளத்தின் மத்திய பெல்ட் ” தொடர்ந்து ஆற்றல் வெளியிடும் துறையாக” அடையாளம் காணப்பட்டுள்ளதால், மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று நில அதிர்வு நிபுணர் எச்சரித்துள்ளார். நேபாளத்தில் இன்று 6.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ஒரு மாதத்திற்குள் ஏற்படும் 3-வது நிலநடுக்கம் ஆகும். இதே போல், டெல்லி-என்சிஆர், உத்தரபிரதேசம் மற்றும் பீகார் உள்ளிட்ட வட இந்தியா முழுவதும் வலுவான நடுக்கம் உணரப்பட்டது. நேபாளத்தின் மத்திய பெல்ட் ” தொடர்ந்து ஆற்றல் வெளியிடும் துறையாக” அடையாளம் காணப்பட்டுள்ளதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என நில அதிர்வு நிபுணர் எச்சரித்துள்ளார்..
இமயமலை புவியியல் வாடியா இன்ஸ்ட்யூட்டில் பணிபுரிந்த நில அதிர்வு நிபுணரான அஜய் பால், இதுகுறித்து பேசிய போது “ நேபாளத்தின் டோட்டி மாவட்டத்திற்கு அருகில் உள்ள பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நவம்பர் 2022 இல் இந்த மாவட்டத்தில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, 6 பேர் பலியானார்கள். அக்டோபர் 3 ஆம் தேதி நேபாளத்தைத் தாக்கிய தொடர் நிலநடுக்கங்களும் இதே பகுதியைச் சுற்றியே இருந்தன.எனவே மக்கள் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். இதனிடையே இந்திய டெக்டோனிக் தட்டு வடக்கு நோக்கி நகரும் போது யூரேசிய தட்டுடன் மோதுவதால், இமயமலைப் பகுதியில் ‘எப்போது வேண்டுமானாலும்’ பெரும் நிலநடுக்கம் ஏற்படும் என்று பல விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். ஏறக்குறைய 40-50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியத் தட்டு இந்தியப் பெருங்கடலில் இருந்து வடக்கே யூரேசியத் தட்டுடன் மோதும்போது இமயமலை உருவானது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இந்திய தட்டு அதன் வடக்கு நோக்கி நகர்வதைத் தொடர்வதால், இமயமலையின் கீழ் அழுத்தம் அதிகரித்து, யூரேசிய தட்டுடன் மோதலை உருவாக்குகிறது. இமயமலையின் மீதான அழுத்தம் ரிக்டர் அளவுகோலில் எட்டுக்கும் அதிகமான பெரிய நிலநடுக்கங்களின் மூலம் வெளியாகும் என நிபுணர்கள் தெரிவித்தனர். இருப்பினும், இவ்வளவு பெரிய நிலநடுக்கம் எப்போது ஏற்படும் என்பதை துல்லியமாக கணிக்க முடியாது என்பதே ஒரு சோகமான விஷயம் என நிபுனர்கள் தெரிவித்துள்ளனர்.







