தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று தலைமைச் செயலகத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் சந்தித்து, ஜெர்மன் நாட்டின் தலைநகர் பெர்லினில் பசிபிக் பகுதி பயண எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில் 8.3.2023 அன்று நடைபெற்ற பட்வா சர்வதேச பயண விருது வழங்கும் விழாவில் தமிழநாட்டின் சுற்றுலாத்துறைக்கு வழங்கப்பட்ட பாரம்பரிய சுற்றுலா இலக்கிற்கான விருது மற்றும் இந்தியாவில் சிறந்த சுற்றுலாத்துறை அமைச்சருக்காக தனக்கு வழங்கப்பட்ட விருது ஆகிய விருதுகளை காண்பித்து வாழ்த்து பெற்றார். உடன் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்திர மோகன், சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி ஆகியோர் உள்ளனர்.






