பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய கொடியை ஏந்திச் செல்லும் சரத் கமல் “எந்த வகையான விளையாட்டு வீரர்”… : 2024

2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய கொடியை ஏந்திச் செல்ல இருக்கும் சரத் கமல் “அதிக பரிச்சயம் இல்லாத விளையாட்டு வீரர்” என்று தமிழ்நாடு தடகள சங்கம் (TNAA) தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு TNAA அனுப்பியுள்ள கடிதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி இந்திய கொடியை ஏந்திச் செல்லும் அளவிற்கு சரத் கமல் எந்த வகையில் சிறந்த விளையாட்டு வீரர் என்று கேள்வி எழுப்பியுள்ளது.

தற்போதைய ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவறும் 130 ஆண்டுகால ஒலிம்பிக் வரலாற்றில் தடகளத்தில் தங்கப் பதக்கம் வென்ற ஒரே இந்திய வீரரான நீரஜ் சோப்ராவை விட்டு சரத் கமலிடம் இந்திய அணிக்கு தலைமை தாங்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது குறித்து விமர்சித்துள்ள தமிழ்நாடு தடகள சங்கம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

புகழ்பெற்ற டேபிள் டென்னிஸ் வீரரான, ஷரத் கமல், இந்த மாத தொடக்கத்தில் சிங்கப்பூர் ஸ்மாஷின் காலிறுதிக்கு வந்த முதல் இந்தியர் ஆனார், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஏழு தங்கப் பதக்கங்கள் உட்பட பத்து தேசிய சாம்பியன்ஷிப் பட்டங்களையும் 13 பதக்கங்களையும் வென்ற சாதனையைப் படைத்துள்ளார்.

41 வயதான அவர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு பதக்கங்களைப் பெற்றார் மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப்பில் மூன்று முறை வெண்கலப் பதக்கம் வென்றவர்.

சிறந்த தரவரிசையின் அடிப்படையில் இந்த ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு இந்திய ஆண்கள் அணி தகுதி பெறுவதில் சரத் கமல் முக்கிய பங்கு வகித்தார்.

இருந்தபோதும் தடகள வீரரான நீரஜ் சோப்ராவை புறம்தள்ளிவிட்டு சரத் கமலை தேர்வு செய்தது குறித்து விமர்சித்துள்ள TNAA, கொடி ஏந்தி செல்பவரை அறிவிப்பதில் என்ன அவசரம் மற்றும் உலக மற்றும் ஒலிம்பிக் சாம்பியனான ஒருவரை புறக்கணிக்க காரணம் என்ன ? கொடி ஏந்தி செல்பவரின் பெயரை அறிவிப்பதில் தேவையில்லாத அவசரம் ஏன் என்பதை இந்திய ஒலிம்பிக் சங்கம் விளக்க வேண்டும்,” என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய கொடியை ஏந்திச் செல்லும் சரத் கமல் “எந்த வகையான விளையாட்டு வீரர்”… : 2024

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்