காஞ்சீபுரம் அருகே பிள்ளையார் பாளையம், திருமலைராஜன் தெருவைச் சேர்ந்தவர் தான் மோகன்ராம் அவர்கள். அவருக்கு வயது 39 ஆகிறது. இவர் பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் ஒன்றில் B.Com இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவரின் பிறந்தநாளை முன்னிட்டு அதே கல்லூரியில் படிக்கும் சக மாணவ நண்பர்களோடு ஆலப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட இருங்குன்றம் பள்ளி பம்ப் ஹவுஸ் அருகில் இருக்கும் பாலாற்றில் நண்பர்களுடன் குளிக்கச்சென்றார். அப்போது ஆழமானப் பகுதிக்கு மோகன்ராம் சென்றதால் நீச்சல் தெரியாமல் திணறிக் கொண்டிருந்தார். உடனேநண்பர்கள் அனைவரும் அவரை காப்பாற்ற முயன்ற நிலையில் நீரில் மூழ்கி மோகன்ராம் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






