பிரதமர் மோடியுடன் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு – ஆந்திராவில் முன்கூட்டியே தேர்தல் ?

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று முன்தினம் டெல்லி சென்று பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை தனித்தனியாக சந்தித்தார். இந்த திடீர் சந்திப்பு ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்த 3 மாதங்களுக்குள் தெலுங்கானா சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆந்திர சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலுடன் நடத்தப்படவுள்ளது. இந்நிலையில் முன்கூட்டியே தெலுங்கானா தேர்தலுடன் ஆந்திர சட்டமன்ற தேர்தலையும் நடத்த முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி விரும்புகிறார். எதிர்க்கட்சிகள் இதுவரை கூட்டணி அமைக்க முடியாமல் திணறி வருகின்றன. இதனால் தற்போது தனக்கு சாதகமான சூழல் நிலவுவதாக கருதி முன்கூட்டியே தேர்தல் நடத்த விரும்புகிறார். சந்திரபாபு ஏற்கனவே பா.ஜ.க உடன் கூட்டணி வைத்து 2019-ம் ஆண்டு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அரசை கவிழ்க்க திட்டமிட்டார். எனவே சந்திரபாபுவை பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் நம்ப தயாராக இல்லை. அதே வேளையில் மத்திய அரசின் சர்ச்சைக்குரிய சில திட்டங்கள் அல்லது மசோதாக்களுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பினாலும் ஒருமுறை கூட எதிர்ப்பு தெரிவிக்காமல் ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவு தெரிவித்து வருகிறார். எனவே முன்கூட்டியே தேர்தல் நடத்தும் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என தெரிகிறது. ஆந்திர மாநில பா.ஜ.க. தலைவராக என்.டி.ஆர். மகள் புரந்தேஸ்வரி அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் தெலுங்கு தேசம் கட்சி முக்கிய பிரமுகர்கள் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.

நெல் கொள்முதல் விலையை கிலோவுக்கு ரூ.35க்கு மேல் உயர்த்த வேண்டும்: விவசாயிகள்

தேனி:இயந்திர வாடகை, கூலி உள்ளிட்ட செலவுகள் இருமடங்காக உயர்ந்துள்ளதால் நெல்கொள்முதல் விலையை கிலோவிற்கு

ரேஷன் அட்டையுடன் ஆதாரை இணைக்காவிட்டால் மாதாந்திர உதவித் தொகை நிறுத்தம்

புதுச்சேரி:புதுச்சேரியில் ரேஷன் அட்டைகளுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் மாதாந்திர மானிய உதவி நிறுத்தப்படும்

3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

சென்னை:கர்நாடகாவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் கால்நடைகளைத் தேடிச் சென்ற 3 தமிழர்கள் மான் வேட்டையில்

3 தமிழர்கள் சுட்டுக்கொலை: – பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம்& அமைச்சர் தகவல்

சென்னை:கர்நாடகாவில் வனத்துறையினரால் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த 3 பேரும், தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர்கள்,

திருவொற்றியூரில் கும்பல் தாக்கி மாணவன் சாவு; விசாரிக்க சென்ற அமைச்சர்களை முற்றுகையிட்ட பொதுமக்கள்

சென்னை:சென்னை திருவொற்றியூர் வசந்தம் நகரை சார்ந்த தனுஷ் அங்குள்ள அரசுப் பள்ளியில் பிளஸ்

பிரதமர் மோடியுடன் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு – ஆந்திராவில் முன்கூட்டியே தேர்தல் ?

நெல் கொள்முதல் விலையை கிலோவுக்கு ரூ.35க்கு மேல் உயர்த்த வேண்டும்: விவசாயிகள்

தேனி:இயந்திர வாடகை, கூலி உள்ளிட்ட செலவுகள் இருமடங்காக உயர்ந்துள்ளதால் நெல்கொள்முதல் விலையை கிலோவிற்கு

ரேஷன் அட்டையுடன் ஆதாரை இணைக்காவிட்டால் மாதாந்திர உதவித் தொகை நிறுத்தம்

புதுச்சேரி:புதுச்சேரியில் ரேஷன் அட்டைகளுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் மாதாந்திர மானிய உதவி நிறுத்தப்படும்

3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

சென்னை:கர்நாடகாவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் கால்நடைகளைத் தேடிச் சென்ற 3 தமிழர்கள் மான் வேட்டையில்

3 தமிழர்கள் சுட்டுக்கொலை: – பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம்& அமைச்சர் தகவல்

சென்னை:கர்நாடகாவில் வனத்துறையினரால் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த 3 பேரும், தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர்கள்,

திருவொற்றியூரில் கும்பல் தாக்கி மாணவன் சாவு; விசாரிக்க சென்ற அமைச்சர்களை முற்றுகையிட்ட பொதுமக்கள்

சென்னை:சென்னை திருவொற்றியூர் வசந்தம் நகரை சார்ந்த தனுஷ் அங்குள்ள அரசுப் பள்ளியில் பிளஸ்