பிரபல இயக்குனர் கே.விஸ்வநாத் மரணம்… திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி !

மூத்த இயக்குனர் கே.விஸ்வநாத் உடல் நலக்குறைவால் நேற்றிரவு காலமானார். 

தென்னிந்தியாவில் பிரபலமான இயக்குனராக இருந்தவர் கே.விஸ்வநாத். 1957-ஆம் ஆண்டு சென்னையில் தனது திரைப்பயணத்தை தொடங்கினார். முதலில் ஒளிப்பதிவாளராக இருந்த அவர், 1975-ஆம் ஆண்டு ‘ஆத்ம கவுரவம்’ என்ற தெலுங்கு படத்தை இயக்கினார். 

முதல் படமே வெற்றிப்பெற சிரிசிரி முவ்வா, சங்கராபரணம், சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கினார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். 

கமலின் ஆஸ்தான இயக்குனராக அவர், ‘குருதிப்புனல்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன்பிறகு முகவரி, ராஜபாட்டை, சிங்கம் 2, யாரடி நீ மோகினி, உத்தம வில்லன், லிங்கா உள்ளிட்ட பல தமிழ் படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தியாவின் உயரிய விருதாக கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருது இவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று பத்ம ஸ்ரீ விருதும் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர பல மாநில விருதுகளை பெற்றுள்ளார். 

1930-ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் பிறந்த அவர், ஐதராபாத்தில் வசித்து வந்தார். சமீபகாலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவருக்கு ஐதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 93 வயதாகும் அவர், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கே.விஸ்வநாத்தின் மறைவு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது இறுதி சடங்குகள் இன்று மாலை நடைபெறவுள்ளது. அவருக்கு பிரபலங்களும், ரசிகர்களும் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

பிரபல இயக்குனர் கே.விஸ்வநாத் மரணம்… திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி !

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.