பென் ஸ்டோக்ஸ் – ஒருநாள் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்தார் !

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி 4 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் முதலில் விளையாடியது. இதில் இரு அணிகளும் 2-2 என்று போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தன. இதையடுத்து 4 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது. இதில், முதல் ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், 2ஆவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து 79 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.

இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது ஒரு நாள் போட்டி தற்போது லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பவுலிங் தேர்வு செய்தது. இதன் காரணமாக இங்கிலாந்து முதலில் பேட்டிங் ஆடியது. இதில், தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோவ், நியூசி, வீரர் டிரெண்ட் போல்ட் பந்தில் டக் அவுட்டில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜோ ரூட் 4 ரன்களில் போல்ட் பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு டேவிட் மலான் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவரும் இணைந்து நியூசிலாந்து பவுலர்களை சரமாரியாக வெளுத்து வாங்கினார். இதில், ஒரு கட்டத்தில் மலான் 96 ரன்கள் எடுத்திருந்த போது போல்ட் பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். ஆனால், பென் ஸ்டோக்ஸ் மட்டும் நங்கூரம் போன்று நின்று அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார்.

அதன் பிறகு 48 பந்துகளில் 82 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஐசிசி ஆண்கள் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இன்னும் 22 நாட்களில் தொடங்க உள்ள நிலையில், இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் சரமாரியாக அதிரடியாக விளையாடி 182 ரன்கள் குவித்து புதிய சாதனையை இன்று நிகழ்த்தியுள்ளார். அவர், 124 பந்துகளில் 15 பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர்கள் உள்பட மொத்தமாக 182 ரன்கள் குவித்தார்.

இதன் மூலமாக ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிகபட்ச ரன் எடுத்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனைக்கு சொந்தகார் ஆனார். 2ஆவது இடத்தில் ஜேசன் ராய் 180 ரன்களுடன் உள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் தேதி ஸ்டோக்ஸ் சர்வதேச போட்டியிலிருந்து ஓய்வு பெறும் திட்டத்தில் இருந்தார்.

அதன் பிறகு கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி தனது ஓய்வு பெறும் முடிவை மாற்றினார். இந்த நிலையில், தற்போது செப்டம்பர் 13, 2023 ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இறுதியாக இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 368 ரன்கள் எடுத்தது.

நியூசிலாந்து அணியைப் பொறுத்த வரையில் வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் ஒரு நாள் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகளை எடுத்தார். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார். பென் லிஸ்டெர் 3 விக்கெட்டும், லாக்கி ஃபெர்குசன் மற்றும் கிளென் பிலிப்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை எடுத்தனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

பென் ஸ்டோக்ஸ் – ஒருநாள் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்தார் !

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.