அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

பேஷன் புரூட் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்….

பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு இந்த மழைப் பருவத்தில், ஸ்நாக்ஸ் டைமிற்கு தினசரி ஒரு பழத்தை கொடுத்துப் பழக்கி விடுவது மிகவும் நல்லது. மழைக்காலம் தொடங்கியவுடன் சளி மற்றும் காய்ச்சல் அழைக்காமலேயே வந்து விடுகின்றன. பொதுவாக பழங்களை அதிகளவில் உண்பவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் இருக்கும். எதிர்ப்பு சக்தி இருக்கையில், சளி மற்றும் காய்ச்சல் அவ்வளவு எளிதில் நெருங்காது. இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு இந்த மழைப் பருவத்தில், ஸ்நாக்ஸ் டைமிற்கு தினசரி ஒரு பழத்தை கொடுத்துப் பழக்கி விடுவது மிகவும் நல்லது.

குழந்தைகளை கவரும் பழங்கள்:
பலவிதமான பழங்களை விரும்பும் குழந்தைகளுக்கு பேஷன் புரூட் மிகவும் பிடிக்கும். இதற்கு மிக முக்கிய காரணம், அதன் உள்ளே ஜெல்லி போன்று இருக்கும் சதைப்பகுதி தான். மேலும், அதன் கொட்டையும் மொறு மொறு என இருக்கும். அதன் சுவையோ இனிப்பு மற்றும் புளிப்பு கலந்து குழந்தைகளை மிகவும் கவரும். இந்தப் பழம் ஒரு பழமையான ஒரு வகை, தமிழில் இப்பழத்தை கொடித்தோடை என்று அழைப்பது வழக்கம். இந்தப் பழம் இந்தியா மற்றும் பிரேசிலை தாயகமாகக் கொண்டுள்ளது. மேலும் நீலகிரி, கொடைக்கானல் மற்றும் வயநாடு போன்ற மலைப்பிரதேசப் பகுதிகளில் அதிகமாக இப்பழம் சாகுபடி செய்யப்படுகிறது.

பேஷன் பழம் மஞ்சள், ஊதா, சிவப்பு மற்றும் பிங்க் என பல நிறங்களில் கிடைக்கிறது. அந்தந்த மண்ணின் தன்மை மற்றும் தட்பவெப்ப நிலையைப் பொறுத்து பழங்களின் நிறம் அமைகிறது. கொடிகளில் விளையும் இப்பழத்தின் நன்மைகள் குறித்து இப்போது காண்போம்.

வைட்டமின் சி :
பேஷன் பழத்தில் ஆரஞ்சு பழம் போல் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் ரத்த நாளங்கள், குருத்தெலும்புகள், தசைகள் மற்றும் கொலாஜனை உருவாக்க உதவுகிறது. ஆகையால் வளரும் குழந்தைகளுக்கு இப்பழத்தை அடிக்கடி கொடுக்கலாம். மேலும், இது சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவுகிறது. உடலில் உண்டாகும் வீக்கத்தை குறைக்கவும், செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. மேலும், சளி வராமலும் பாதுகாக்கும். புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளையும் குறைக்கிறது.

வைட்டமின் ஏ:
பேஷன் பழத்தின் கூழ் மற்றும் விதைகளில் தினசரி உங்களுக்குத் தேவையான வைட்டமின் ஏ 8% நிறைந்துள்ளது. இது, ஆரோக்கியமான கண்கள் மற்றும் செல்கள், இனப்பெருக்கம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

நார்ச்சத்து:
பேஷன் பழத்தில் நார்ச்சத்தும் அதிகளவு நிரம்பியுள்ளது. இது, உங்கள் குடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இப்பழத்தை உண்ணும் போது, பசி உணர்வு குறையும். கொலஸ்ட்ரால், நீரிழிவு மற்றும் இதய நோய் போன்ற பிரச்சனைகளில் இருந்து உங்களை பாதுகாக்கும்.

ஊட்டச்சத்துக்கள்:
பேஷன் பழம் உடலுக்குத் தேவையான கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் ஃபோலேட் ஆகியவற்றை அள்ளிக் கொடுக்கிறது. இந்த சத்துக்கள் சிறுநீரகங்கள், நரம்புகள், தசைகள் மற்றும் இதயம் என அனைத்து உறுப்புகளையும் பாதுகாக்கிறது.

எப்படி உண்ணலாம்:
பேஷன் பழத்தை நீங்கள் அப்படியே சாப்பிடலாம். இருப்பினும் புரூட் மிக்ஸ் காக்டெயில் ஜூஸ் மற்றும் தயிர் கலந்த ஸ்மூத்தி என இதைக் கொண்டு உங்களுக்கு பிடித்த ஒரு பானத்தை தயார் செய்தும் குடிக்கலாம். இப்படி ஜூஸ் மற்றும் ஸ்மூத்தி என மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம். அது மட்டுமல்ல ஐஸ்கிரீம் மற்றும் கேக் போன்றவற்றிலும் இதனை சேர்த்து அதன் சுவையைக் கூட்டலாம்.

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்

பேஷன் புரூட் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்….

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்