கோட்டுச்சேரி காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு பகுதியில் உள்ள ஜவகர்லால் நேரு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு சமுதாய நலப்பணித் திட்டம் சார்பாக போதைப்பொருள் எதிர்ப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் பேசுகையில், போதைப்பொருட்கள் பயன்படுத்தினால் ஏற்படும் தீமைகள், உடல் உபாதைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு கல்வி பாதிக்கும் சூழல் உண்டாகும். இதை தவிர்த்து பள்ளி மாணவ-மாணவிகள், தேவையான சத்தான காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுகளை சாப்பிட வேண்டும். துரித உணவுகளை தவிர்த்து உடல் நலத்தை பேணி பாதுகாக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






