மணிப்பூரில் போலீஸ் ஐஜி வாகனம் எரிப்பு – 30 பேர் கைது !

மணிப்பூரில் போலீஸ் ஐஜி வாகனம் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மணிப்பூர் மாநிலம் மேற்கு இம்பாலில் உள்ள குவாகீதெல் பகுதியில் போலீஸ் ஐஜி வாகனம் மர்ம கும்பல்களால் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, வன்முறை கும்பலை போலீசார் கலைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், 2005 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் கபீப், டிடிம் சாலையில் இம்பால் நோக்கி அவாரது பாதுகாப்பு குழுவுடன் சென்று கொண்டிருந்த போது இந்த தாக்குதல் நடைபெற்றதாக தெரிவித்துள்ளனர். மர்ம கும்பல் நடத்திய இந்த தாக்குதலில் ஐஜி கபீப் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பித்துள்ளார். எரிந்துகொண்டிருந்த வாகனத்தின் உள்ளே இருந்து வெளியேறிய தோட்டா காலில் தாக்கியதில் காவலர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்தில் இருந்த போலீசார் உடனடியாக செயல்பட்டு, கண்ணீர் புகை குண்டுகளை வீசி, வன்முறை கும்பலை கலைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் அதிகாரியின் வாகனம் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு அம்மாநில போலீசார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் எவ்வித இடையூறுகளுக்கும் இடமளிக்காமல் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

முன்னதாக, மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் தலைமையில் அம்மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு தொடர்பான உயர்நிலை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின்னர், மாநிலத்தில் இயல்பு நிலை திரும்புவதை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு எடுத்து வருவதாக முதல்வர் பைரன் சிங் தெரிவித்துள்ளார். மணிப்பூரில் நடைபெற்று வரும் இனக் கலவரத்தில் இதுவரை 140க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

மணிப்பூரில் போலீஸ் ஐஜி வாகனம் எரிப்பு – 30 பேர் கைது !

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.