மதர்தெரேசா மாற்றுத்திறனாளிகள் சாதனையாளர் அறக்கட்டளை முப்பெரும் விழா

திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் தண்டுமாநகரில் உள்ள மதர் தெரேசா மாற்றுத்திறனாளிகள் சாதனையாளர் நலவாழ்வு அறக்கட்டளை சார்பில் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா, நலத்திட்ட உதவிகள், விருதுகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா நிறுவனர் கே.தேவி தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து மாற்றுத்திறனாளிகள், அறக்கட்டளைகளின் அறங்காவலர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், பல்துறை சாதனையாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி ஜெ.முகிலாவிற்கு இளம் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

மதர்தெரேசா மாற்றுத்திறனாளிகள் சாதனையாளர் அறக்கட்டளை முப்பெரும் விழா