புதுடெல்லி:
மணிப்பூர் கலவரத்தில் ஏராளமான மரணங்கள், காயங்கள், மானபங்கம் என்று தலைவிரித்து ஆடிய நிலையில் பிரதமர் மோடி மணிப்பூருக்கு சென்று மக்கள் பாதிப்பை பார்வையிடவில்லை. மணிப்பூர் கலவரலத்தை தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிற குற்றச்சாட்டை முன்வைத்து மக்களவையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. குரல்வாக்கெடுப்பு நடத்தி நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துவிட்டதால் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு கிடைக்கவில்லை. இதனையடுத்து மோடி அரசுக்கு கொண்டு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிந்தது. நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்காமல் எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு செய்தன.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:






