சென்னை: உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையை முன்னிட்டு, மதுரைக்கு சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறனை அவர் நேரில் சந்தித்து நலம் குறித்து விசாரித்தார்.
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு, மதுரை நாராயணபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். இந்த நிலையில், தேவர் ஜெயந்தியையொட்டி, மதுரைக்கு இன்று சென்றிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், நாராயணபுரம் பேங்க் காலனியில் உள்ள அவரது இல்லத்துக்கு நேரில் சென்று உடல் நலம் விசாரித்தார். அமைச்சரகள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தங்கம் தென்னரசு மற்றும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.






