மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள், நேற்று அண்ணா சதுக்கத்தில், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதி ரூ.1.20 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தினை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தயாநிதிமாறன், மாண்புமிகு மேயர் திருமதி.ஆர்.பிரியா, ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.நா.எழிலன், மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.மு.மகேஷ்குமார், மாநகராட்சி கூடுதல் தலைமைச் செயலாளர் /ஆணையாளர் டாக்டர் ஜெ.இராதாகிருஷ்ணன், நிலைக்குழுத் தலைவர் திரு.நே.சிற்றரசு, தேனாம்பேட்டை மண்டலக் குழுத் தலைவர் திரு.மதன்மோகன் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.







