மெரினாவில் உள்ள 2 நீலக்கொடி கடற்கரைப் பகுதிகளில்,பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், வாக்களிப்பதன் அவசியம் குறித்துநாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் மூலமாக ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு, சென்னை மெரினா
கடற்கரையில் உள்ள 2 நீலக்கொடி கடற்கரைப் பகுதிகளில் வாக்களிப்பதன் அவசியம்
குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் அன்று (05.04.2026) நடைபெற்றதை
ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.,
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொது
தேர்தல் – 2026னையொட்டி, இளம் வாக்காளர்கள், புதிய வாக்காளர்கள் மற்றும்
பொதுமக்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், “உங்கள் வாக்கு உங்கள்
உரிமை” உணர்த்தும் விதமாகவும், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாநகராட்சி
மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, அன்று (05.04.2026) மெரினா கடற்கரை நீலக்கொடி
கடற்கரைப் பகுதி-1ல் (மெரினா நீச்சல் குளம் அருகில்) நடைபெற்ற பறையாட்டம்,
நையாண்டி மேளம், மல்லர் கம்பம், பல்சுவை நடனம், கரோக்கி, நடனம், டிஜே
உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மூலமாக வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு
ஏற்படுத்தப்பட்டதை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.
மேலும், மெரினா கடற்கரை நீலக்கொடி கடற்கரைப் பகுதி-2ல் (விவேகானந்தர்
இல்லம் எதிரே) நடைபெற்ற பறையாட்டம், பெரிய மேளம், கரகம், கோலாட்டம்,
நடனம், புலியாட்டம், கரோக்கி, டிஜே உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மூலமாக
வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதை ஏராளமான
பொதுமக்கள் பார்வையிட்டனர்.
இந்த கலை நிகழ்ச்சிகளில் 100க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்று சிறப்பாக
கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.
அன்று (05.04.2026) மாலை 5.30 மணி முதல் மூன்று மணி நேரம் மெரினாவில்
உள்ள 2 நீலக்கொடி கடற்கரைப் பகுதிகளில் நடைபெற்ற இந்த கலை நிகழ்ச்சிகளின்
மூலமாக பல்லாயிரக்கணக்கான பொதுமக்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து
விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வாயிலில் சிறுமழைக்கே தண்ணீர் தேங்கும் அவலம் : பெருமழைக்குள் தடுப்பு நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப் பேட்டையில் இன்று மாலை லேசான மழை பெய்தது. அரை மணி

தூத்துக்குடியில் கோவில் இடிப்பு: கிறிஸ்தவ நிறுவனத்துக்கு எதிராக இந்து முன்னணியினர் கோஷம்

தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குரும்பூர் ரயில் நிலையம் அருகில் விநாயகர்

தி.நகர் பள்ளி மாணவர் சாவில் மர்மம்:மாணவர்கள் திடீர் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு; குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்த போலீசார்

சென்னை:சென்னை தி.நகர் பள்ளி மாணவன் இறந்த சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் மீது

மின்மாற்றி கொள்முதலில் ரூ.397 கோடி முறைகேடு குற்றச்சாட்டு: முழு உண்மையை வெளிப்படுத்த வேல்முருகன் வலியுறுத்தல்

சென்னை:மின்​வாரி​யத்​தின் மின்​மாற்றி கொள்​முதலில் ரூ.397 கோடி அளவுக்கு முறை​கேடு நடந்ததாக எழுந்த குற்​றச்​சாட்​டின்

மெரினாவில் உள்ள 2 நீலக்கொடி கடற்கரைப் பகுதிகளில்,பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், வாக்களிப்பதன் அவசியம் குறித்துநாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் மூலமாக ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வாயிலில் சிறுமழைக்கே தண்ணீர் தேங்கும் அவலம் : பெருமழைக்குள் தடுப்பு நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப் பேட்டையில் இன்று மாலை லேசான மழை பெய்தது. அரை மணி

தூத்துக்குடியில் கோவில் இடிப்பு: கிறிஸ்தவ நிறுவனத்துக்கு எதிராக இந்து முன்னணியினர் கோஷம்

தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குரும்பூர் ரயில் நிலையம் அருகில் விநாயகர்

தி.நகர் பள்ளி மாணவர் சாவில் மர்மம்:மாணவர்கள் திடீர் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு; குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்த போலீசார்

சென்னை:சென்னை தி.நகர் பள்ளி மாணவன் இறந்த சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் மீது

மின்மாற்றி கொள்முதலில் ரூ.397 கோடி முறைகேடு குற்றச்சாட்டு: முழு உண்மையை வெளிப்படுத்த வேல்முருகன் வலியுறுத்தல்

சென்னை:மின்​வாரி​யத்​தின் மின்​மாற்றி கொள்​முதலில் ரூ.397 கோடி அளவுக்கு முறை​கேடு நடந்ததாக எழுந்த குற்​றச்​சாட்​டின்