மேகதூது அணை கட்டக்கூடது : தமிழக அரசு உறுதி

கர்நாடக மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு பொறுப்பேற்ற பிறகு அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் முதன்முறையாகப் பெங்களூருவில் நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனையில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள மேகதாது அணை திட்டத்துக்கு அனுமதி பெறுவதற்கு விரைவில் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களைச் சந்தித்துப் பேசவிருப்பதாகக் கூறியுள்ளார்.

மேகதாதுவில் அணை கட்டுவது கர்நாடகத்தின் உரிமை என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை, காவிரி டெல்டா விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய மாநில அரசுகள் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக மேகதாதுவில் அணைக் கட்டும் கர்நாடகத்தின் முயற்சிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் தமிழ்நாட்டின் எதிர்ப்பையும் மீறி மேகதாதுவில் கர்நாடக அரசு அணைக் கட்டினால் அதனை உடைத்தெறிவோம் என்றும் காவிரிப் பாசன விவசாயிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நேற்று ஜப்பானில் இருந்து சென்னை திரும்பிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காவிரி ஆற்றில் கர்நாடக அரசு மேகதாது அணை கட்டக்கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளதாகக் கூறி உள்ளார்.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

மேகதூது அணை கட்டக்கூடது : தமிழக அரசு உறுதி

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்