புதுடெல்லி:
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் பண்டிகயையை கொண்டாடுவதை முன்னிட்ட அவர்களுக்கு வாழ்த்துக்களை அரசியல் கட்சியினர் முதல் அனைவரும் பகிர்ந்து வருகின்றனர்.
பிரதமர் மோடி
ரமலான் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “ஈத்-உல்-பித்ர் நல்வாழ்த்துக்கள். நமது சமூகத்தில் நல்லிணக்கம் மற்றும் கருணை உணர்வு மேலும் வளரட்டும். அனைவரின் அற்புதமான ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காகவும் நான் பிரார்த்தனை செய்கிறேன். ரமலான் வாழ்த்துகள்!” என்று தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுனர்
ரமலான் பண்டிகையை முன்னிட்டு, ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து செய்தியில், “இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக ஒரு மாத நோன்பை கடைப்பிடித்து, இல்லாதோருக்கு ஈகை அளித்து சகோதரத்துவத்தை முன்னிறுத்தும் ரமலான் பண்டிகையை கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு ஈகைத்திருநாளாம் ரமலான் திருநாள் வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :56 தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்றசொற்காத்துச் சோர்விலாள் பெண். விளக்கம்:கற்பு நெறியில்





