பெருநகர சென்னை மாநகராட்சியில் தொடர்புடைய சேவைத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையாளர் டாக்டர் ஜெ.இராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நேற்று ரிப்பன் கட்டட வளாகத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில், முதன்மைச் செயலாளர் / சென்னை மெட்ரோ இரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் திரு.எம்.ஏ.சித்திக், இ.ஆ.ப., அவர்கள், இணை ஆணையாளர் (பணிகள்) டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள், வட்டார துணை ஆணையாளர்கள் திரு.எம்.சிவகுரு பிரபாகரன், இ.ஆ.ப., (வடக்கு) அவர்கள், திரு.எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப., (மத்தியம்) அவர்கள், திரு.எம்.பி.அமித், இ.ஆ.ப., (தெற்கு) அவர்கள், தலைமைப் பொறியாளர்கள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.







