விராட் கோலியின் சாதனையை முறியடித்த சுப்மன் கில் – முழு விவரம் இதோ!

நியூசிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய வீரர் சுப்மன் கில் இரண்டு புதிய சாதனைகளை படைத்தார். 

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி அகமதாபத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ்  வென்ற இந்திய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய தொடக்க ஆட்டக்காரர், சுப்மன் கில் 20 ஓவர் கிரிக்கெட்டில் தனது ‘கன்னி’ சதத்தை நிறைவு செய்தார். அவரது சரவெடியான பேட்டிங்கால் அணியின் ஸ்கோர் 200-ஐ எளிதில் கடந்தது. 20 ஓவர் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 234 ரன்கள் குவித்தது. சுப்மன் கில் 126 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதனை அடுத்து இமாலய இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆரம்பத்திலேயே நிலைகுலைந்தது. நியூசிலாந்து அணி 12.1 ஓவர்களில் வெறும் 66 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் இந்தியா 168 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றதோடு டி20 தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

நேற்றைய போட்டியில் சுப்மன் கில் விராட் கோலியின் சாதனையை முறியடித்தார். அதாவது, விராட் கோலி கடந்த ஆண்டு ஆசிய கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 122 ரன்கள் எடுத்ததே, சர்வதேச 20 ஓவர் போட்டியில் இந்தியர் ஒருவரின் அதிகபட்சமாக இருந்தது. அதை தற்போது சுப்மன் கில் முறியடித்துள்ளார். அத்துடன் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் சதம் அடித்த 5-வது இந்தியராக சாதனை பட்டியலில் இணைந்தார். ஏற்கனவே சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி ஆகிய இந்தியர்கள் இச்சாதனையை படைத்துள்ளனர்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி

விராட் கோலியின் சாதனையை முறியடித்த சுப்மன் கில் – முழு விவரம் இதோ!

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி