விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் வலுக்கலொட்டி கிராமத்தில் ஹிந்து தர்ம பாதுகாப்பு பேரவை நிறுவன தலைவர் நா.ஜெகன்நாதன் மற்றும் மாநில மகளிர் அணி தலைவி ஜெ.பாக்கியலட்சுமி தலைமையில் காரியாபட்டி நகர மன்ற செயலாளர் ஜெ.கருப்பசாமி மற்றும் காரியாபட்டி நகர மன்ற துணை செயலாளர் இ.நவநீதகிருஷ்ணன் ஏற்பாட்டின் பேரில் மகளிர் மற்றும் இளைஞர்கள் 50க்கும் மேற்பட்டோர், ஹிந்து தர்ம பாதுகாப்பு பேரவையில் இணைந்தனர்.
அப்போது, நிறுவன தலைவர் நா. ஜெகநாதனுக்கு வலுக்குலொட்டி கிராம மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
இந்நிகழ்வில் மாநில ஊடக பிரிவு தலைவர் அரவிந்தன், மேலூர் மாவட்ட செயலாளர் முருகன், விருதுநகர் மாவட்ட செயலாளர் பத்மநாபன், விருதுநகர் மாவட்ட துணை செயலாளர் ஜெ.பாலமுருகன், தென் சென்னை மாவட்ட மகளிர் அணி செயலாளர் சாந்தி மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

🇮🇳 அண்மை செய்தி 📡🔹🔸 மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
👉🗳️இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. – இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச்





