தக்காளி விலை உயர்வு, பொதுமக்களை விழிபிதுங்க வைத்திருக்கும் நிலையில், சின்ன வெங்காயம், பூண்டு உள்ளிட்ட பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த தக்காளியின் விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்து ரூ.130க்கு விற்கப்பட்டு வருகிறது. தக்காளி விலை எப்போதும் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. சின்ன வெங்காயம் ஒரே நாளில் ரூ.50 உயர்ந்து கிலோ ரூ.150க்கு விற்பனையாகிறது.
அதே போல கடந்த வாரத்தில் ஒரு கிலோ பூண்டு ரூ.100 -ரூ.130 வரை விற்கப்பட்டு வந்த நிலையில், இன்று ரூ.180க்கு விற்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர்.இதனிடையே நேற்று 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட இஞ்சியின் விலை ஒரே நாளில் 60 ரூபாய் குறைந்து இன்று 260 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.இதேபோல் ஒரு கிலோ பச்சை மிளகாய் 80 ரூபாய்க்கும், பீன்ஸ் 90 ரூபாய்க்கும், கேரட் 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.






