வெனிசுலா நிலநடுக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அதிர்ச்சித் தகவல்.
1000+ உயிரிழப்பு?
📍. வெனிசுலாயில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என அமெரிக்க புவியியல் மையம் அதிர்ச்சித் தகவல்.
சில நிமிட இடைவெளியில் 7.1 மற்றும் 7.5 ரிக்டர் அளவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. பல மாடி கட்டடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின.வெனிசுவேலாவில் ஒரு நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால், அந்நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் கராகஸிற்கு மேற்கே 160 கி.மீ தொலைவில் முதலாவது நிலநடுக்கம் 7.2 என்ற அளவில் பதிவானதாகவும், அதனைத் தொடர்ந்து 7.5 என்ற அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
➤ சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் கராகஸ் வரை உணரப்பட்டதால், ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ள மக்கள் தங்களைக் காப்பாற்றுமாறு உதவி கேட்டு அலறி வருவதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
➤ பேரழிவை ஏற்படுத்தியிருக்கும் இந்த நிலநடுக்கத்தால் கடுமையான சேதங்களும், அதிகமான உயிரிழப்புகளும் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
👉இதுவரை குறைந்தது 32 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.







