ஹைடெக் பார்க் அரசு அடுக்குமாடி குடியிருப்பு அருகிலுள்ள சாலையில் விபத்தை தடுக்க பேரிகார்டு அமைக்க ரூ.25.ஆயிரம் செலவு ஆகும் என கூறிவது தொடர்பாக எஸ் பி யிடம் புகார்
கடந்த பல நாட்களாக 15க்கும் மேற்பட்ட புகாரளித்த பிறகும்கூட மேற்படி இடத்தில் விபத்தில் சிக்கி யாரும் உயிரிழக்க வில்லை என கூறி காவல் துறை கடிதம்
விபத்துகளை தடுக்க பேரிகார்டு அமைக்க வலியுறுத்தல்
இது தொடர்பாக திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பாக அதன் தலைவர் சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன், பாலகுமார் ஆகியோர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேரிடையாக அளித்துள்ள மனுவில்..
திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுக்கம்பாளையம் கிராமத்திலுள்ள நெடுஞ்சாலையில்லுள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஹைடெக் பார்க் அரசு அடுக்குமாடி குடியிருப்பு அருகிலுள்ள சாலை சந்திக்கும் பகுதியில் தொடர்ச்சியாக அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டு வருகிறால் விபத்துகளை தடுக்க பேரிகார்டு அமைக்க வேண்டி 15க்கும் மேற்பட்ட புகாரளித்த பிறகும்கூட பல்லடம் போக்குவரத்து காவல் துறையினர் மேற்படி இடத்தில் யாரும் விபத்தில் பலியாக இல்லை எனவும் வழக்கு எதுவும் பதிவாக வில்லை எனவும் அலட்சியமாக பொறுப்பற்ற பதிலளித்துள்ளதால் பொது மக்கள் நலன் கருதி ஏதேனும் உயிர் சேதம் ஏற்படும் முன்னதாக மேற்படி இடத்தில் சாலைகளில் இருபுறமும் பேரிகார்டு அமைக்க மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் விரைவாக தீர்வுகாண வேண்டும்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுக்கம்பாளையம் கிராமத்திலுள்ள நெடுஞ்சாலையில்லுள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஹைடெக் பார்க் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் 450 வீடுகளில் 600 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
அருகில் கிறிஸ்தவ ஆலயம், தனியார் பள்ளி உள்ளது மேற்படி அடுக்குமாடி குடியிருப்பு அருகிலுள்ள சாலை சந்திக்கும் பகுதியில் தொடர்ச்சியாக அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது.
இந்த இந்த பகுதியில் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், பள்ளி மாணவ மாணவிகள், கூலித்தொழிலாளர்கள் அதிகளவிலாக வசிக்கின்றனர்.
தினசரி காலை மாலை இரவு என அதிவேக வாகனங்கள் காரணமாக அடிக்கடி இங்கு விபத்து ஏற்பட்டு வருகின்றது.
மேற்படி சாலை சந்திக்கும் பகுதியில் தொடர்ச்சியாக அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டு வருகிறால் விபத்துகளை தடுக்க பேரிகார்டு அமைக்க வேண்டி 15க்கும் மேற்பட்ட புகாரளித்த பிறகும்கூட பல்லடம் போக்குவரத்து காவல் துறையினர் மேற்படி இடத்தில் யாரும் விபத்தில் பலியாக இல்லை எனவும் வழக்கு எதுவும் பதிவாக வில்லை எனவும் அலட்சியமாக பொறுப்பற்ற பதிலளித்துள்ளனர்.
குறிப்பாக விபத்து ஏற்பட்டு ஏதேனும் உயிர் சேதம் ஏற்படும் என்பதால் தான் மனு அளிக்கப்பட்டது.
மேலும் மேற்படி அரசு அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள கூலித்தொழிலாளர்கள் வசிக்கும் நிலையில் சாலையில் விபத்து ஏற்பட்டு ஏதேனும் ஆபத்து ஏற்பட கூடும் என்ற நிலையில் மனு அளித்திருந்த நிலையில் பல்லடம் போக்குவரத்து காவல் துறையினர் மேற்படி இடத்திலுள்ள சாலை சந்திப்பில் இருபுறமும் பேரிகார்டு அமைக்க ரூ. 25 ஆயிரம் செலவு ஆகும் என கூறி வசூலித்து கொடுத்தால் உடனடியாக பேரிகார்டு அமைக்கப்படுவதாக கூறியதாக புகார் எழுந்துள்ளன.
எனவே உடனடியாக இது தொடர்பாக உரிய தீர்வுகண்டு மேற்படி இடத்தில் ஏதேனும் சாலை விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படும் முன்னதாக விரைவாக மேற்படி இடத்திலுள்ள சாலை சந்திப்பில் இருபுறமும் பேரிகார்டு அமைக்க உரிய வழிமுறையாக போர்க்கால அடிப்டபடையில் விரைவாக தீர்வுகாண வேண்டுமென திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறாக அதில் கூறப்பட்டுள்ளது.







